search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ்சுக்கு தீ"

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கு தீவைத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் தினமும் இரவு குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு 11.30 மணிக்கு அந்த பஸ் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    பஸ்சுக்குள் டிரைவரும், கண்டக்டரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.

    திடீரென்று அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சின் டயருக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அப்போது பஸ்சுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த டிரைவர்-கண்டக்டர் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் பஸ்சின் டயர் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியடித்து வெளியே வந்து கூச்சலிட்டனர்.

    அவர்களது சத்தம் கேட்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஓட்டலில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் டயர் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இது குறித்து தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் அந்த பஸ்சுக்கு மாற்று டயர் பொருத்தப்பட்டு உடனே கடலூர் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அரசு டவுன் பஸ்சுக்கு தீ வைத்த மர்ம மனிதர்கள் யார்? என்று போலீசார் தேடிவருகிறார்கள். மேலும் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    நெல்லை அருகே அரசு பஸ்சுக்கு தீவைத்து எரித்து தலைமறைவான மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை சந்திப்பில் இருந்து தாழையூத்துக்கு இன்று ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பரமசிவன் ஓட்டினார். கண்டக்டராக சின்னப்பன் என்பவர் இருந்தார். பஸ்சில் சுமார் 10 பயணிகளே பயணித்தனர்.

    அந்த பஸ் தாழையூத்து தென்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. வடக்கு தாழையூத்தில் ஒரு திருப்பத்தில் பஸ் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென பஸ்சை வழிமறித்தனர். அவர்கள் கையில் பெட்ரோல் கேன் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பரமசிவன் பஸ்சை நிறுத்தினார். உடனே பஸ்சில் ஏறிய மர்ம நபர்களில் ஒருவர் டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து பஸ்சை ஓரமாக ஓட்டி செல்லுமாறு மிரட்டினார். இதனால் பயந்து போன டிரைவர் பஸ்சை ரோட்டோரமாக நிறுத்தினார்.

    இதையடுத்து பஸ்சில் ஏறிய மற்றொரு நபர் பயணிகளிடம் இந்த பஸ்சுக்கு தீ வைக்க போகிறோம், ஆகவே அனைவரும் இறங்கி சென்று விடுங்கள் என கூறினார். இதனால் பயணிகள் அனைவரும் பதட்டத்துடன் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர்.

    இதையடுத்து மர்ம நபர்கள் 2 பேரும் பஸ்சின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர். பஸ் முழுவதுமாக கொளுந்து விட்டு எரிந்தது. அப்போது அந்த மர்ம நபர்கள் ராக்கெட் ராஜாவை விடுதலை செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் வீசியவாறும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுபற்றி உடனடியாக தாழையூத்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பாளை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அரசு பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் போலீசார் அதிரடி படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்தை போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் நடந்த சம்பவம் குறித்து அவர் விவரங்கள் கேட்டறிந்தார். மேலும் பஸ்சுக்கு தீவைத்த மர்ம நபர்கள் குறித்து அடையாளங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் தாழையூத்து பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×